ஆட்டோமொபைல்
ஃபோர்டு இகோஸ்போர்ட்

ஃபோர்டு புதிய டோர்-ஸ்டெப் சர்வீஸ் அறிமுகம்

Published On 2020-09-29 10:09 GMT   |   Update On 2020-09-29 10:09 GMT
ஃபோர்டு நிறுவனத்தின் புதிய டோர்-ஸ்டெப் சர்வீஸ் இந்தியாவில் துவங்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் டோர்-ஸ்டெப் சர்வீஸ் எனும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களது வீடு அல்லது அலுவலகத்தில் வாகனத்திற்கு சர்வீஸ் செய்து கொள்ள முடியும். இதற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

புதிய ஃபோர்டு சேவையை பெற வாடிக்கையாளர்கள் டையல்-ஏ-ஃபோர்டு தொடர்பு கொள்ள வேண்டும். இதுவரை ஃபோர்டு நிறுவன விற்பனை மற்றும் சர்வீஸ் சார்ந்த விவரங்களுக்கும் டையல்-ஏ-ஃபோர்டு சேவையில் தெரிந்து கொள்ள முடியும். 



முதற்கட்டமாக இந்த சேவை டெல்லி, குர்கிராம், நொய்டா, காசியாபாத், பரிதாபாத், ஜெய்பூர், லக்னோ, பெங்களூரு, கொச்சின், திருவனந்தபுரம், ஐதராபாத், கொல்கத்தா, புவனேஷ்வர், மும்பை, தானே, ஔரங்காபாத் மற்றும் ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் துவங்கப்பட்டு இருக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் நகரங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் டையல்-ஏ-ஃபோர்டு இலவச தொடர்பு எண்ணில் அழைப்பு மேற்கொண்டு வாகனங்களுக்கு வீட்டிலேயே சர்வீஸ் செய்து கொள்ள முடியும்.
Tags:    

Similar News