ஆட்டோமொபைல்
புதிய ஹோண்டா மாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு
ஹோண்டா நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் புதிய மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியாவில் செப்டம்பர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.
வெளியீட்டிற்கு முன் புதிய மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை ஹோண்டா வெளியிட்டு இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் பிரீமியம் மாடலாக இருக்கும் என்றும் இது 300 சிசி பிரிவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த மாடல் பிங்விங் விற்பனையகங்களின் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி புதிய மோட்டார்சைக்கிள் 300 முதல் 500 சிசி பிரிவில் குரூயிசர் மாடலாக இருக்கும் என தெரிகிறது.
இது ராயல் என்ஃபீல்டு மற்றும் ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஹோண்டா ரிபெல் 300 மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது.