ஆட்டோமொபைல்
டொயோட்டா அர்பன் குரூயிசர்

டொயோட்டா அர்பன் குரூயிசர் வெளியீட்டு விவரம்

Published On 2020-09-15 09:35 GMT   |   Update On 2020-09-15 09:35 GMT
டொயோட்டா நிறுவனத்தின் புதிய அர்பன் குரூயிசர் மாடலின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் அர்பன் குரூயிசர் மோட்டார் செப்டம்பர் 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. முன்னதாக இந்த மாடலுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்கியது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய அர்பன் குரூயிசர் மாடல்- மிட், ஹை மற்றும் பிரீமியம் என மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் ஆகும் என கூறப்படுகிறது. டொயோட்டா மற்றும் சுசுகி நிறுவனங்கள் கூட்டணியில் வெளியாக இருக்கும் இரண்டாவது மாடலாக அர்பன் குரூயிசர் இருக்கிறது.



அர்பன் குரூயிசர் மாடலின் முன்புறம் புதிய வடிவமைப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் முற்றிலும் வித்தியாசமான அலாய் வீல்கள், டெயில் லேம்ப்கள், இன்டீரியர் தீம் வழங்கப்படும் என தெரிகிறது.

இத்துடன் புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடலில் 105 பிஎஸ் பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்று் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம்.
Tags:    

Similar News