ஆட்டோமொபைல்
டொயோட்டா

டொயோட்டா அர்பன் குரூயிசர் வெளியீட்டு விவரம்

Published On 2020-07-31 09:19 GMT   |   Update On 2020-07-31 09:19 GMT
டொயோட்டா நிறுவனத்தின் புதிய அர்பன் குரூயிசர் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


டொயோட்டா நிறுவனம் விரைவில் 4 மீட்டர் எஸ்யுவி பிரிவில் புதிய அர்பன் குரூயிசர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் செப்டம்பர் 2020 வாக்கில் அறிமுகமாகும் என தெரிகிறது. 

புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடலுக்கான முன்பதிவுகள் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடல் ரீபேட்ஜ் செய்யப்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா மாடல் ஆகும். 

இதன் பெரும்பாலான வடிவமைப்பு மாருதி நிறுவனத்தை தழுவி உருவாக்கப்படுகிறது. எனினும், கிளான்ஸா போன்று இல்லாமல் புதிய மாடலின் முன்புறம் புதிய வடிவமைப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் முற்றிலும் வித்தியாசமான அலாய் வீல்கள், டெயில் லேம்ப்கள், இன்டீரியர் தீம் வழங்கப்படும் என தெரிகிறது.



காரின் உள்புறம் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், குரூயிஸ் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் மல்டி இன்ஃபோ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

பாதுகாப்பிற்கு புதிய காரின் முன்புறம் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர் வயூ கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அர்பன் குரூயிசர் மாடலில் 105 பிஎஸ் பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்று் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம்.
Tags:    

Similar News