ஆட்டோமொபைல்
இந்தியாவில் புதிய ஆடி கார் முன்பதிவு துவக்கம்
ஆடி நிறுவனத்தின் புதிய கார் முன்பதிவு இந்திய சந்தையில் துவங்கப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஆடி நிறுவனம் தனது புத்தம் புதிய ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காரை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கார் வெளியீட்டை ஆடி ஏற்கனவே அறிவித்துவிட்டது.
அந்த வகையில் வெளியீட்டுக்கு முன் புதிய ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடலுக்கான முன்பதிவினை ஆடி நிறுவனம் துவங்கி இருக்கிறது. புதிய கார் முன்பதிவு ஆன்லைன் மற்றும் விற்பனையகங்களில் நடைபெறுகிறது. ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காரின் விநியோகம் ஆகஸ்ட் மாத வாக்கில் துவங்கும் என ஆடி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. மேலும் புதிய காரை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.
ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 600 பிஹெச்பி பவர், 800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.6 நொடிகளில் எட்டிவிடும்.