ஆட்டோமொபைல்
எம்.ஜி. ஹெக்டார் பிளஸ்

எம்.ஜி. ஹெக்டார் பிளஸ் கார் அறிமுகம்

Published On 2020-02-08 10:45 GMT   |   Update On 2020-02-08 09:32 GMT
ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஹெக்டார் பிளஸ் காரை அறிமுகம் செய்துள்ளது.



எம்.ஜி. மோட்டார் நிறுவனம் ஹெக்டார் பிளஸ் காரை ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் அறிமுகம் செய்தது. புதிய ஹெக்டார் பிளஸ் மாடலில் மூன்றாம் அடுக்கு இருக்கைகளை கொண்டிருக்கிறது. மேலும் இது முந்தைய மாடலை விட 40 எம்.எம். நீளமாக இருக்கிறது.

எம்.ஜி. ஹெக்டார் பிளஸ்- ஆறு பேர் இருக்கை மற்றும் ஏழு பேர் இருக்கை என இருவிதங்களில் கிடைக்கிறது. காரின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்.இ.டி. டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.



புதிய ஹெக்டார் பிளஸ் மாடலில் 170 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டி.சி.டி. வழங்கப்படுகிறது.

இந்தியாவில் எம்.ஜி. ஹெக்டார் பிளஸ் மாடல் வரும் வாரங்களில் வெளியிடப்பட இருக்கிறது. புதிய ஹெக்டார் பிளஸ் டாடா கிராவிடாஸ் மாடலுக்கு நேரடி போட்டியாக அமைகிறது. 

Tags:    

Similar News