ஆட்டோமொபைல்
கான்செப்ட் எஸ்-ஏ1

ஹூண்டாய் மற்றும் உபெர் கூட்டணியில் பறக்கும் கார் கான்செப்ட் அறிமுகம்

Published On 2020-01-07 10:00 GMT   |   Update On 2020-01-07 10:00 GMT
ஹூண்டாய் மற்றும் உபெர் நிறுவனங்கள் இணைந்து பறக்கும் கார் கான்செப்ட் மாடலை சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்துள்ளன.



ஹூண்டாய் மோட்டார் கம்பெனி மற்றும் உபெர் நிறுவனங்கள் இணைந்து பறக்கும் கார் வாகனத்தை உருவாக்கி வருகின்றன. இரு நிறுவனங்கள் கூட்டணியில் புதிய பறக்கும் வாகனத்திற்கான கான்செப்ட் எஸ்-ஏ1 பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கான்செப்ட் வாகனம் 2020 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இரு நிறுவனங்களின் கூட்டணியில் ஹூண்டாய் நிறுவனம் பறக்கும் வாகனங்களை தயாரித்து வழங்கும். உபெர் மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான வான்வழி சேவை, தரைவழி போக்குவரத்துக்கான இணைப்புகள், நுகர்வோர் இன்டர்ஃபேஸ்களை ஏரியல் ரைடு ஷேர் நெட்வொர்க் மூலம் வழங்க இருக்கிறது.



ஹூண்டாய் நிறுவனம் உபெர் எலிவேட் உடன் இணைந்து தனிப்பட்ட பறக்கும் வாகனமான எஸ்-ஏ1 மாடலை உருவாக்கி இருக்கிறது. இதன் மூலம் வாகனத்தை தரையில் இருந்து செங்குத்தாக மேலே பறக்க செய்து, தரையிறங்க வைக்க முடியும்.

புதிய கான்செப்ட் விமானம் மணிக்கு 290 கிலோமீட்டர் வேகத்திலும், தரையில் இருந்து சுமார் 1000 முதல் 2000 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டிருக்கிறது. இதை கொண்டு 100 கிலோமீட்டர்கள் வரை தொடர்ச்சியாக பயணிக்க முடியும். முழுமையாக எலெக்ட்ரிக் திறன் கொண்டிருக்கும் புதிய கான்செப்ட் வாகனம் ஐந்து முதல் ஏழு நிமிடங்களில் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

முதற்கட்டமாக இந்த வாகனத்தை ஒருவர் இயக்கும் வகையிலும், எதிர்காலத்தில் தானியங்கி முறையில் இயங்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் கேபினில் நான்கு பேர் வரை அமர முடியும். 
Tags:    

Similar News