ஆட்டோமொபைல்
புதிதாக 44 எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடும் ஹூண்டாய்
ஹூண்டாய் மோட்டார் குழுமம் ஆட்டோமொபைல் சந்தையில் புதிதாக 44 எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் குழுமம் சர்வதேச சந்தையில் 2025-க்குள் மொத்தம் 44 எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இவற்றில் எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்கள் அடங்கும்.
இதற்கென ஹூண்டாய் நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி கொரிய வோண்களை முதலீடு செய்ய இருப்பதாக ஹூண்டாய் துணை தலைவர் எய்சுன் சங் தெரிவித்தார்.
2019-ம் ஆண்டில் ஹூண்டாய் குழுமம் மொத்தம் 24 எலெக்ட்ரிக் மாடல்களை வெளியிட்டுள்ளது. 2025-ம் ஆண்டிற்குள் ஹூண்டாய் நிறுவனம் 13 ஹைப்ரிட், ஆறு பிளக்-இன் ஹைப்ரிட், 23 பேட்டரி எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் இரண்டு ஃபியூயல் செல் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க இருக்கிறது.
இத்துடன் புதிதாக இ.வி. தளம் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஹூண்டாய் ஈடுபட்டுள்ளது. புதிய தளத்தின் கீழ் ஹூண்டாய் நிறுவனம் புதிய கார்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.