ஆட்டோமொபைல்
மஹிந்திரா

இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா XP பிளஸ் டிராக்டர் அறிமுகம்

Published On 2019-12-25 11:34 GMT   |   Update On 2019-12-25 11:34 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XP பிளஸ் டிராக்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.



மஹிந்திரா நிறுவனம் இந்த வருட பொங்கலுக்கு புதிய XP பிளஸ் சீரிஸ் டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறந்த செயல்திறனுடன் கூடிய எரிபொருள் சிக்கனம் கொண்டதாக விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது இந்த புதிய மாடல் டிராக்டர்.

இன்றைய விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப அதிக செயல்திறன், உறுதியான கட்டமைப்பு, குறைந்த எரிபொருள் தேவை, சிறந்த நம்பகத்தன்மை போன்ற அம்சங்களுடன் வந்துள்ளன மஹிந்திரா XP பிளஸ் சீரிஸின் 275XP பிளஸ் ELS DI (37 HP) 475 XP பிளஸ் ELS DI (44 HP) மற்றும் 575 XP பிளஸ் ELS DI (47 HP) என்ஜின்கள் கொண்ட இந்த புதிய டிராக்டர்களின் அணி வகுப்பு.



மஹிந்திராவின் பூமிபுத்தா சீரிஸ் என்ஜின்கள் 30-50 ஹெச்பி சக்தி கொண்டவைகளாக ட்ராக்டர் சந்தையில் வெற்றி பெற்று திகழ்கிறது. தற்போது XP பிளஸ் சீரிஸ் அதிகரிக்கப்பட்ட சக்தி கொண்ட எக்ஸ்ட்ரா லாங் ஸ்ட்ரோக (ELS) என்ஜின்களை கொண்டுள்ளதால் அதிக செயல்திறனும் அதிக இழுக்கும் திறனும் (டார்க்) கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய டிராக்டர்களின் வெளிப்புறத் தோற்றமும் கருப்பு மற்றும் சில்வர் நிறம் கொண்ட அழகிய ஹெட்லைட்களுடன் கம்பீரமாக தோற்றமளிக்கிறது. 6 வருட உத்திரவாதத்துடன், சிறந்த எரிபொருள் சிக்கனம், குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் அதிக சொகுசு அம்சங்களுடன் வந்துள்ளது மஹிந்திரா XP பிளஸ் சீரிஸ். 

மேலும் இந்த டிராக்டர்கள் 49 பைசா குறைவான வட்டி விகிதத்திலும் தவணையில் வாங்குவோருக்கு முதல் தவணை இலவசமாகவும் குறைவான முன் பணம் செலுத்தியும் வாங்கக்கூடிய வசதி கொண்டுள்ளன.
Tags:    

Similar News