ஆட்டோமொபைல்
கியா செல்டோஸ்

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார்

Published On 2019-12-23 10:56 GMT   |   Update On 2019-12-23 10:56 GMT
கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக செல்டோஸ் எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணிகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



கியா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் செல்டோஸ் எஸ்.யு.வி. மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் செல்டோஸ் கார் தற்சமயம் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய செல்டோஸ் இ.வி. கார் SP2 EV எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. செல்டோஸ் கார் இந்தியாவில் ஆந்திர பிரதேச மாநிலத்திலும் கொரியாவில் உள்ள குவாஞ்சு ஆலையில் உருவாக்கப்படுகிறது. செல்டோஸ் இ.வி. கார் பாடி பேனல்கள், உள்புறங்கள் செல்டோஸ் மாடலில் உள்ளதை பயன்படுத்திக் கொள்ளும் என கூறப்படுகிறது.



எனினும், ஸ்டான்டர்டு எஸ்.யு.வி. மாடலுடன் புதிய இ.வி. காரை வித்தியாசப்படுத்த சிறிதளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் பார்க்க கியா நிரோ மற்றும் சோல் இ.வி. மாடல்களை போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.

மேலும் புதிய செல்டோஸ் இ.வி. காரில் கியா சோல் இ.வி. மற்றும் ஹூண்டாய் கோனா இ.வி. மாடல்களில் உள்ள எலெக்ட்ரிக் பவர்டிரெயின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 204 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார், 64 KwH பேட்டரி பேக் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

செல்டோஸ் எலெக்ட்ரிக் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 400 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய செல்டோஸ் இ.வி. கார் இந்தியாவில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News