ஆட்டோமொபைல்
ஃபோர்டு மஸ்டாங்

விரைவில் இந்தியா வரும் புதிய ஃபோர்டு மஸ்டாங்

Published On 2019-11-26 11:36 GMT   |   Update On 2019-11-26 11:36 GMT
ஃபோர்டு நிறுவனத்தின் புதிய மஸ்டாங் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஃபோர்டு இந்தியா நிறுவனம் புதிய மஸ்டாங் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த காரின் விற்பனை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் புதிய ஃபோர்டு மஸ்டாங் சிலகாலமாக விற்பனை செய்யப்படுகிறது.

முந்தைய மாடலை விட புதிய ஃபோர்டு மஸ்டாங் காரில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பொனெட் சற்று கீழே இறக்கப்பட்டுள்ளது. இதில் ஏர் வென்ட்கள் இடம்பெற்றிருக்கிறது. இதன் முன்புறம் மேம்பட்ட கிரில், முந்தைய மாடலில் இருப்பதை விட மெல்லியதாக இருக்கிறது.



புதிய மஸ்டாங் காரின் முன்பறம் மற்றும் பின்புறத்தில் மேம்பட்ட பம்ப்பர் மற்றும் புதிய வடிவம் கொண்ட ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் உள்புறம் 12 இன்ச் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், உள்புற அம்சங்கள் முழுக்க மென்மையான பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. 

இத்துடன் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், எல்.இ.டி. லைட்டிங், ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், மவுண்ட்டெட் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 450 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது.
Tags:    

Similar News