ஆட்டோமொபைல்
கார் மாடல்கள் விலையை திடீரென மாற்றிய மஹிந்திரா
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது பொலிரோ நியோ, ஸ்கார்பியோ மற்றும் மராசோ மாடல்கள் விலையை மாற்றியது.
மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. புதிய விலை இம்மாதமே அமலாகிறது. 2021 ஆண்டில் மட்டும் மஹிந்திரா நிறுவனம் தனது கார்களின் விலையை நான்காவது முறையாக உயர்த்தி இருக்கிறது.
விலை உயர்வின் படி மஹிந்திரா மராசோ எம்.பி.வி. மாடல் பேஸ் வேரியண்ட் ரூ. 12 ஆயிரமும், எம் பிளஸ் வேரியண்ட் ரூ. 13 ஆயிரமும், டாப் எண்ட் மாடலான எம்ஜி பிளஸ் வேரியண்ட் ரூ. 14 ஆயிரமும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பொலிரோ நியோ மாடலின் என்10 மற்றும் என்10 ஒ வேரியண்ட்கள் விலை ரூ. 30 ஆயிரம் அதிகமாகி இருக்கிறது. ஸ்கார்பியோ எஸ்.யு.வி. மாடல் விலை ரூ. 18 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 22 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.