ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி கார்

ஸ்விப்ட் மற்றும் இதர மாடல்கள் விலையை உயர்த்திய மாருதி சுசுகி

Published On 2021-07-12 09:41 GMT   |   Update On 2021-07-12 09:41 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் சி.என்.ஜி. மாடல்கள் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஸ்விப்ட் மற்றும் அனைத்து சி.என்.ஜி. மாடல்களுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது விலை உயர்வு ரூ. 15 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு இன்று (ஜூலை 12) முதல் அமலுக்கு வந்தது.



சி.என்.ஜி. மாடல்கள் மட்டுமின்றி பெட்ரோல் கார்களின் விலையும் விரைவில் உயர்த்தப்பட இருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. "முந்தைய அறிவிப்பின் படி பல்வேறு செலவீனங்கள் அதிகரித்துள்ளதால் புதிய விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது," என மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது. 

இந்த ஆண்டு மட்டும் மாருதி சுசுகி விலை உயர்வு மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் தேர்வு செய்யப்பட்ட மாடல்கள் விலை ரூ. 34 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. ஆண்டு துவக்கம் முதலே கார் விலை உயர்வுக்கு செலவீனங்கள் அதிகரித்ததையே காரணமாக தெரிவித்தது.
Tags:    

Similar News