ஆட்டோமொபைல்
வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் கால அவகாசத்தை நீட்டிக்கும் டாடா மோட்டார்ஸ்
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், டாடா மோட்டார்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கார்களுக்கான வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் கால அவகாசத்தை நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வருவதால் இந்த அறிவிப்பை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு இருக்கிறது.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. தொற்று அதிக தீவிரம் அடைந்து வருவதால், பல்வேறு நிறுவனங்கள் தங்களின் ஆலை பணிகளை நிறுத்துவிட்டன.
சர்வீஸ் மையங்கள் ஊரடங்கு காரணமாக செயல்படாது என்பதால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏப்ரல் 1 துவங்கி மே மாத வாக்கில் நிறைவு பெறும் வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் ஜூன் 20, 2021 வரை நீட்டிக்கப்படும் என தெரிவித்து இருக்கிறது.