ஆட்டோமொபைல்
சுமார் 7 லட்சம் வாகனங்களை ரீகால் செய்யும் ஹோண்டா
ஹோண்டா நிறுவனம் உலகம் முழுக்க ஏழு லட்சம் வாகனங்களை ரீகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது.
ஹோண்டா மோட்டார் கோ நிறுவனம் உலகம் முழுக்க 7,61,000 வாகனங்களை ரீகால் செய்வதாக அறிவித்து உள்ளது. வாகனங்களின் பியூவல் பம்ப் கோளாறு இருப்பதால் ரீகால் செய்யப்படுகிறது. இது நாளடைவில் என்ஜின் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
அமெரிக்காவில் 2018-2020 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 6,28,000 அக்யூரா மற்றும் இதர ஹோண்டா வாகனங்கள் ரீகால் செய்யப்படுகின்றன. இந்த கோளாறு காரணமாக பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை ஹோண்டா நிறுவனத்திற்கு எந்த புகாரும் எழவில்லை.
ரீகால் செய்யப்படும் வாகனங்களில் அக்கார்ட், சிவிக், சிஆர்-வி, பிட், பைலட், ரிட்ஜெலின், எம்டிஎக்ஸ், ஆர்டிஎக்ஸ் மற்றும்
டிஎல்எக்ஸ் போன்றவை அடங்கும்.