ஆட்டோமொபைல்
ஸ்கோடா கோடியக்

ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2021-03-25 10:47 GMT   |   Update On 2021-03-25 10:47 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் கோடியக் பேஸ்லிப்ட் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் 2021 மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகிறது. புது கார் வெளியீட்டு விவரத்தை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் விற்பனை, சர்வீஸ் மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் ஜாக் ஹாலின்ஸ் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.



இந்த எஸ்யுவி மாடல் 2020 ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு பலமுறை தள்ளிப்போனது. வழக்கமான ஸ்கோடா கார்களை போன்றே, இந்த காரும் பெட்ரோல் என்ஜினுடன் வெளியாகும் என தெரிகிறது. அந்த வகையில் புது மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.

இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. ஸ்கோடாவின் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் என்ஜின் 148 பிஹெச்பி பவர், 340 என்எம் டார்க் செயல்திறன் வழங்கியது.
Tags:    

Similar News