ஆட்டோமொபைல்
எம்ஜி ஹெக்டார் உற்பத்தியில் புது மைல்கல்
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டார் மாடல் உற்பத்தியில் புது மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் மாடல் உற்பத்தியில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. 50 ஆயிரமாவது யூனிட் வதோதரா ஆலையில் உள்ள பெண்கள் குழுவினர் உற்பத்தி செய்தனர். தற்சமயம் எம்ஜி மோட்டார் நிறுவனம் மொத்த ஊழியர்களில் 33 சதவீதம் பெண்களை நியமித்து உள்ளது. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
எம்ஜி நிறுவனம் மேம்பட்ட ஹெக்டார் மாடலை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை ரூ. 12.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
புது மாடலில் ட்வீக் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், 18 அங்குல அலாய் வீல்கள், வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கை, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்ப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஹெக்டார் மாடலின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் சிவிடி டிரான்ஸ்மிஷனை அறிமுகம் செய்தது. இந்த என்ஜின் 141 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இதே என்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டிசிடி யூனிட் வழங்கப்படுகிறது. இதன் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் 168 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.