ஆட்டோமொபைல்
ரெனால்ட் கார்

ஐந்து புதிய விற்பனையகங்களை திறந்த ரெனால்ட்

Published On 2021-02-20 09:04 GMT   |   Update On 2021-02-20 09:04 GMT
ரெனால்ட் நிறுவனம் ஐந்து புதிய விற்பனை மையங்களை தெலுங்கானாவில் திறந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


ரெனால்ட் நிறுவனம் தெலுங்கானா மாநிலத்தில் புதிதாக ஐந்து விற்பனை மையங்களை திறந்துள்ளது. இவை எல்பி நகர், கொம்பள்ளி, மலக்பெட், வாரங்கல் மற்றும் நிசாம்பாத் போன்ற பகுதிகளில் அமைந்துள்ளன. இதுதவிர மேலும் ஏழு புதிய விற்பனை மையங்களை திறக்க ரெனால்ட் முடிவு செய்துள்ளது. 

தெலுங்கானா மாநிலத்தின் புதிய விற்பனை மையங்களை பிபிஎஸ் மோட்டார்ஸ் எனும் தனியார் நிறுவனம் நிர்வகிக்கிறது. இந்த நிறுவனம் விற்பனை மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் வீட்டு வாசலில் சேவை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. 



முன்னதாக ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கைகர் மாடலை அறிமுகம் செய்தது. இந்தியாவில் புதிய ரெனால்ட் கைகர் மாடல் விலை ரூ. 5.45 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.55 லட்சம் ஆகும். 

இதற்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். புதிய ரெனால்ட் கைகர் மாடல் இரண்டு வித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள், நான்கு வேரியண்ட்கள் மற்றும் ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. 
Tags:    

Similar News