ஆட்டோமொபைல்
மஹிந்திரா நிறுவன வாகனங்களின் விலை உயர்வு
மஹிந்திரா நிறுவன வாகனங்களின் விலை இந்த தேதியில் இருந்து உயர்த்தப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. அதன் படி விலை உயர்வு ஜனவரி 1, 2021 முதல் அமலாக இருக்கிறது. விலை உயர்வு பயணிகள் வாகனம் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கும் பொருந்தும்.
உதிரிபாகங்கள் மற்றும் இதர உள்கட்டமைப்பு கட்டணம் அதிகரித்து இருப்பதால் விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது என மஹிந்திரா தெரிவித்து இருக்கிறது. வெவ்வேறு மாடல்களின் புதிய விலை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
கடந்த நிதியாண்டு வாகனங்கள் விற்பனையை அதிகப்படுத்த மஹிந்திரா நிறுவனம் பல்வேறு சலுகைகள் மற்றும் கவர்ச்சிகர தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்தது. இதுதவிர டிசம்பர் 2020 முதல் ஆன்லைன் மூலம் விற்பனையாகும் அக்சஸரீக்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கி வருகிறது.