ஆட்டோமொபைல்
மாருதி கார்

ஜனவரி 2021 முதல் புதிய விலை - மாருதி சுசுகி அறிவிப்பு

Published On 2020-12-11 09:47 GMT   |   Update On 2020-12-11 09:47 GMT
ஜனவரி 2021 முதல் கார் மாடல்களுக்கு புதிய விலை நிர்ணயம் செய்யப்பட இருப்பதாக மாருதி சுசுகி அறிவித்து இருக்கிறது.

மாருதி சுசுகி லிமிட்டெட் நிறுவனம் ஜனவரி 2021 முதல் தனது கார் மாடல்களின் விலை உயர்த்தப்படும் என அறிவித்து இருக்கிறது. கார் உற்பத்தி செலவீன கட்டணம் உயர்ந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

விலை உயர்வு வெவ்வேறு மாடல்களின் வேரியண்ட்கள் அளவில் வேறுபடும் என மாருதி சுசுகி தெரிவித்து உள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் தற்சமயம் 14 கார்களை விற்பனை செய்து வருகிறது. இவை ஆல்டோ (ரூ. 2.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம்) துவங்கி எக்ஸ்எல்6 (ரூ. 9.84 லட்சம், எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.

முன்னதாக டிசம்பர் மாதத்தில் மாருதி சுசுகி வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி மாருதி சியாஸ், எஸ் பிரெஸ்ஸோ மற்றும் செலரியோ போன்ற மாடல்களுக்கு ரூ.. 51 ஆயிரம் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

Tags:    

Similar News