ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி எர்டிகா

விற்பனையில் புதிய மைல்கல் எட்டிய எர்டிகா

Published On 2020-11-18 09:41 GMT   |   Update On 2020-11-18 09:41 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா எம்பிவி மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது.


மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா எம்பிவி மாடல் கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் மாருதி சுசுகி எர்டிகா எம்பிவி மாடல் 5.5 லட்சம் யூனிட்களுக்கும் அதிகமாக விற்பனையாகி இருக்கிறது.



இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசுகி எர்டிகா மாடல் அதிகம் விற்பனையாகும் எம்பிவியாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் எர்டிகா மாடல் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக விற்பனையில் முன்னணியில் உள்ளது.

மாருதி எர்டிகா எம்பிவி மாடல் இரண்டாம் தலைமுறை வெர்ஷன் விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் நவம்பர் 2018 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வெளிப்புறம் மற்றும் உற்புறங்களில் முற்றிலும் புதிய வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

பின் 2019 ஆம் ஆண்டு மாருதி சுசுகி நிறுவனம் எர்டிகா மாடலின் 6 பேர் பயணிக்கக்கூடிய வெர்ஷனை எக்ஸ்எல்6 பெயரில் அறிமுகம் செய்தது. இந்த மாடலும் நெக்சா விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News