ஆட்டோமொபைல்
ஹூண்டாய் எக்ஸ்சென்ட்

இந்தியாவில் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் விற்பனை நிறுத்தம்?

Published On 2020-10-27 11:18 GMT   |   Update On 2020-10-27 11:18 GMT
ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்சென்ட் மாடல் கார் இந்திய விற்பனை நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது.


ஹூண்டாய் நிறுவனம் தனது வலைதளத்தில் இருந்து எக்ஸ்சென்ட் மாடலை சத்தமின்றி நீக்கி உள்ளது. ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காம்பேக்ட் செடான் மாடல் அந்நிறுவன வலைதளத்தில் காணப்படாததால், இதன் விற்பனை இந்திய சந்தையில் நிறுத்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.

முன்னதாக வெளியான தகவல்களின் படி ஹூண்டாய் இந்தியா தனது எக்ஸ்சென்ட் மாடலுக்கு மாற்றாக புதிதாக ஆரா எனும் பெயரில் காம்பேக்ட் செடான் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. 



இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆரா மாடல் எக்ஸ்சென்ட் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதுவரை எக்ஸ்சென்ட் மற்றும் ஆரா மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்சமயம் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் மாடல் வாடகை கார் பயன்பாட்டிற்கு தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இது சிஎன்ஜி வேரியண்ட் ஆகும்.
Tags:    

Similar News