ஆட்டோமொபைல்
மாருதி பலேனோ

குஜராத் ஆலையில் மாருதி சுசுகி புதிய சாதனை

Published On 2020-10-23 09:21 GMT   |   Update On 2020-10-23 09:21 GMT
மாருதி சுசுகி நிறுவனம் தனது குஜராத் ஆலையில் இருந்து புதிய சாதனையை படைத்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


மாருதி சுசுகி லிமிட்டெட் நிறுவனம் தனது குஜராத் ஆலையில் இருந்து பத்து லட்சமாவது யூனிட்டை வெளியிட்டு உள்ளது. மாருதியின் குஜராத் ஆலையில் இது புதிய சாதனையாக அமைந்து இருக்கிறது. இந்த சாதனை அக்டோபர் 21 ஆம் தேதி எட்டப்பட்டு இருக்கிறது.

குஜராத் ஆலை உற்பத்தியில் பத்து லட்சம் யூனிட்கள் 3 ஆண்டுகள் 9 மாதங்களில் எட்டியிருக்கிறது. இது மற்ற ஆலைகளை விட வேகமானது என மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது. இந்த ஆலையில் உற்பத்தி பணிகள் பிப்வரி 2017 வாக்கில் துவங்கப்பட்டது.



புதிய மைல்கல் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் ஆகும். இது நெக்சா பிரீமியம் விற்பனையகம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பலேனோ ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் பிரத்யேகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இந்த மாடல் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படுகிறது. 

Tags:    

Similar News