ஆட்டோமொபைல்
செப்டம்பரில் சுமார் 8 ஆயிரம் கார்களை விற்பனை செய்த டொயோட்டா
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் 2020 செப்டம்பர் மாதத்தில் சுமார் 8 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் 2020 செப்டம்பர் மாதத்தில் மட்டும் 8116 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. கொரோனாவைரஸ் பாதிப்பை தொடர்ந்து வாகன விற்பனை சந்தை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்நிலையில், 2020 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது செப்டம்பர் மாத விற்பனையில் டொயோட்டா நிறுவனம் 46 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. 2019 செப்டம்பரில் டொயோட்டா நிறுவனம் 10,203 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.
கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடும் போது, முன்பதிவு சதவீதம் 14 முதல் 18 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது.