ஆட்டோமொபைல்
மாருதி எர்டிகா

ஜூலையில் பயணிகள் வாகன விற்பனை 30 சதவீதம் உயர்வு

Published On 2020-08-11 11:33 GMT   |   Update On 2020-08-11 11:33 GMT
இந்தியாவில் 2020 ஜூலை மாத பயணிகள் வாகன விற்பனை 30 சதவீதம் உயர்வை கண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக முதல் காலாண்டு விற்பனை படுமோசமான சூழலை சந்தித்தது. தற்சமயம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் இந்திய ஆட்டோ துறை சரிவில் இருந்து மீளத் துவங்கி உள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின் படி 2020 ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 14,64,133 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இது ஜூன் 2020 மாதத்துடன் ஒப்பிடும் போது 30 சதவீதம் அதிகம் ஆகும். 

ஜூன் 2020 மாதத்தில் மொத்தம் 11,19,048 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதுட கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும் போது 14 சதவீதம் குறைவு ஆகும்.
Tags:    

Similar News