ஆட்டோமொபைல்
டாடா டிகோர் ஜெடிபி மற்றும் டியாகோ ஜெடிபி

இரண்டு கார்களுக்கு விடைகொடுக்கும் டாடா மோட்டார்ஸ்

Published On 2020-06-15 09:52 GMT   |   Update On 2020-06-15 09:52 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி கார் மாடல்களுக்கு விடை கொடுத்திருக்கிறது.



டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் ஜெடிபி மற்றும் டியாகோ ஜெடிபி மாடல்களை இந்திய சந்தையில் இருந்து விலக்கிக் கொள்வதாக அறிவித்து இருக்கிறது. 

இரு மாடல்களும் டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜெயம் ஆட்டோமோடிவ் நிறுவனங்களிடையேயான கூட்டணியை தொடர்ந்து வெளியிடப்பட்டது. இரு நிறுவனங்கள் கூட்டணியில் 2017 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் 2018 ஆம் ஆண்டு டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி மாடல்கள் வெளியிடப்பட்டன.



இந்திய சந்தையில் தற்போதைய சூழல் சரியில்லாததும், இரு மாடல்களின் விற்பனை தொடர்ந்து சரிந்ததை தொடர்ந்து இவை விலக்கிக் கொள்ளப்படுகின்றன. முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜெயம் ஆட்டோமோடிவ்ஸ் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை வாங்குவதாக அறிவித்தது. 

டாடா டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி மாடல்களில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருந்தன. இவை 114 பிஹெச்பி பவர் வழங்கின. சக்திவாய்ந்த என்ஜின் தவிர இரு மாடல்களும் சிறப்பான டிசைன் செய்யப்பட்டு மெக்கானிக்கல் அப்டேட்களும் செய்யப்பட்டன.
Tags:    

Similar News