ஆட்டோமொபைல்
ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்

இந்திய சந்தைக்கென பிரத்யேக எலெக்ட்ரிக் எஸ்யுவி உருவாக்கும் ஹூண்டாய்

Published On 2020-06-12 11:36 GMT   |   Update On 2020-06-12 11:36 GMT
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தைக்கென பிரத்யேக எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட் நிறுவனம் இந்தியாவில் கோனா எலெக்ட்ரிக் காரை கடந்த ஆண்டு ஜிலை மாதம் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 23.7 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஹூண்டாய் நிறுவனம் மற்றொரு பிரம்மாண்ட எலெக்ட்ரிக் காரை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சியோன் சியோப் கிம் தெரிவித்தார்.



இதுதவிர குறைந்த விலையில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யவும் ஹூண்டாய் திட்டமிட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹூண்டாய் புதிய எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் 2022 ஆம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய எலெக்ட்ரிக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 முதல் 300 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என தெரிகிறது. 

Tags:    

Similar News