ஆட்டோமொபைல்
கார் விற்பனையை ஊக்குவிக்க மாருதி சுசுகியின் மாஸ்டர் பிளான்
கார் விற்பனையை ஊக்குவிக்க மாருதி சுசுகி நிறுவனத்தின் மாஸ்டர் பிளான் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்களின் விற்பனையை ஊக்குவிக்க அதிரடி நிதி சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்கென மாருதி சுசுகி நிறுவனம் சோலமண்டலம் நிதி நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
இத்துடன் வாகனத்தின் ஆன் ரோடு விலையில் 90 சதவீதம் நிதி சலுகையும், நீண்ட கால மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு கஸ்டமைஸ் செய்யக்கூடிய வகையில் நிதி சலுகைகளை வழங்கும் நோக்கில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.
பை நௌ பே லேட்டர் சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் புதிய கார் வாங்கிய 60 நாட்கள் கழித்து மாத தவணையை செலுத்த முடியும். எனினும், இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட மாருதி சுசுகி மாடல்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
மேலும் இது ஜூன் 30 ஆம் தேதிக்குள் கடன் தொகை உறுதி செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா போன்ற நிறுவனங்களும் இதேபோன்ற சலுகையை அறிவித்து இருக்கின்றன.