ஆட்டோமொபைல்
கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் விற்பனையை துவங்கிய ஃபோக்ஸ்வேகன்
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஆன்லைன் விற்பனை மற்றும் சேவையை துவங்கி இருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது வாகனங்களின் ஆன்லைன் விற்பனை மற்றும் சேவையை துவங்கி இருக்கிறது. ஆன்லைன் கார் விற்பனை மூலம் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் காலக்கட்டத்தில் பாதுகாப்பு மற்றும் சவுகரியத்தை வழங்க முடியும்.
கார் வாங்குவதற்கான அனைத்து வழிமுறைகளையும் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ள முடியும் என ஃபோக்ஸ்வேகன் இந்தியா தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விரும்பும் மாடலை தேர்வு செய்வது, வாகனத்தை முன்பதிவு செய்வது மற்றும் அதற்கான தொகையை ஆன்லைனில் செலுத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் வாங்கும் கார்களை வீட்டிற்கே விநியோகம் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. வாடிக்கையாளருக்கு கார் விநியோகம் செய்யும் முன் விற்பனையாளரின் பணியாளர்கள் காரை முழுமையாக சுத்தம் செய்து வழங்குவர்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 137 விற்பனை மற்றும் 116 சரீவாஸ் டச் பாயிண்ட்களும் ஆன்லைனில் ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் இந்தியா வலைதளத்தில் வாடிக்கையாளர்கள் அனைத்து சேவைகளையும் இயக்க முடியும்.
இந்தியாவில் மே 3 ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்ததும், பணிகளை துவங்க ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த டிகுவான் ஆல்ஸ்பேஸ் மற்றும் டி ராக் எஸ்யுவி மாடல்களின் விநியோகத்தை துவங்க இருக்கிறது.