ஆட்டோமொபைல்
டாடா அல்ட்ரோஸ்

டாடா கார்களுக்கு அதிரடி சலுகை அறிவிப்பு

Published On 2020-03-11 07:50 GMT   |   Update On 2020-03-11 07:50 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



இந்தியாவில் ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின் பிஎஸ்.6 ரக வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற விதிமுறை அமலாக இருக்கிறது. இதனால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் பி.எஸ்.4 மாடல்களை சலுகை விலையில் விற்பனை செய்ய துவங்கி இருக்கின்றன.

அந்த வகையில் உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது பி.எஸ்.4 ரக வாகனங்களுக்கு அதிரடி சலுகை மற்றும் சேமிப்புகளை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. மேலும் பி.எஸ். 4 வாகனங்களுக்கான சலுகை மார்ச் 19-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுவதாக தெரிகிறது.



அதன்படி டாடா ஹெக்சா மாடல் வேரியண்ட்களுக்கு ரூ. 2.05 லட்சம் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா ஹேரியர் பி.எஸ். 4 மாடலுக்கு ரூ. 1.30 லட்சம் மற்றும் பி.எஸ். 6 மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று டாடா செஸ்ட் மாடலுக்கு ரூ. 90 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

டாடா போல்ட் காருக்கான விலையில் ரூ. 80 ஆயிரமும், டிகோர் மாடலுக்கு ரூ. 70 ஆயிரம், டாடா சஃபாரி ஸ்டாம் மாடலுக்கு ரூ. 55 ஆயிரம், டாடா நெக்சான் மாடலுக்கு ரூ. 55 ஆயிரம் மற்றும் டாடா டியாகோ மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News