ஆட்டோமொபைல்
டாடா அல்ட்ரோஸ்

இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் முன்பதிவு துவங்கியது

Published On 2019-12-27 10:16 GMT   |   Update On 2019-12-27 10:16 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அல்ட்ரோஸ் காரின் முன்பதிவு இந்தியாவில் துவங்கி இருக்கிறது.



இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் காருக்கான முன்பதிவு துவங்கியது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய காருக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமாக துவங்கி இருக்கிறது. முன்பதிவு துவங்கியதை புதிய வீடியோ டீசர் மூலம் டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது.

டாடா அல்ட்ரோஸ் கார் ஆன்லைன் அல்லது நாடு முழுவதிலும் இயங்கி வரும் விற்பனை மையங்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாடா அல்ட்ரோஸ் விற்பனை இந்தியாவில் ஜனவரி 2020 வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்தியாவில் டாட் நிவறுவனத்தின் முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக அல்ட்ரோஸ் கார் இருக்கிறது. டாடா அல்ட்ரோஸ் கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாகியுள்ளது. டாடா ஹேரியர் மாடலை தொடர்ந்து இம்பேக்ட் 2.0 வடிவமைப்பை தழுவி உருவாகி இருக்கும் இரண்டாவது கார் மாடலாக டாடா அல்ட்ரோஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டாடா நிறுவனம் புதிய அல்ட்ரோஸ் காரை நேரடியாக பி.எஸ். 6 விதகளுக்கு பொருந்தும் என்ஜின் ஆப்ஷன்களில் வெளியிட முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அல்ட்ரோஸ் காரின் வெளியீடு தாமதமாகி இருப்பதாக தெரிகிறது.

இந்திய சந்தையில் டாடா அல்ட்ரோஸ் கார் மாருதி சுசுகி பலேனோ, டொயோட்டா கிளான்சா மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News