ஆட்டோமொபைல்
மாருதி ஆல்டோ 800 VXI+

இந்தியாவில் மாருதி ஆல்டோ 800 VXI+ அறிமுகம்

Published On 2019-12-20 09:51 GMT   |   Update On 2019-12-20 09:51 GMT
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய ஆல்டோ 800 VXI+ காரை அறிமுகம் செய்துள்ளது.



மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய ஆல்டோ VXI+ காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 3.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆல்டோ காரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் புதிய ஆல்டோ VXI+மாடலில் மாருதியின் அதிநவீன ஸ்மார்ட்பிளே 2.0 ஏழு இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் 2019 வேகன்ஆர் மாடலில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.



புதிய ஸ்மார்ட்பிளே 2.0 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கஸ்டமைஸ் செய்யும் வசதியும், பயனுள்ள கிராஃபிக்கல் யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது. மாருதி நிறுவனம் ஆல்டோ 800 ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்த கார் புதிய பாதுகாப்பு விதிகளை பூர்த்தி செய்யும் அம்சங்களை கொண்டிருந்தது.

புத்தம் புதிய ஆல்டா VXI+ மாடலிலும் 796சிசி, 3 சிலிண்டர் பி.எஸ். 6 ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 47 பி.ஹெச்.பி. பவர், 69 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. மேலும் இந்த என்ஜின் முந்தைய பி.எஸ். 4 என்ஜினை விட 25 சதவீதம் குறைவான நைட்ரஜன் ஆக்சைடை வெளியிடும் என கூறப்படுகிறது. 

புதிய மாருதி ஆல்டோ 800 VXI+ மாடலில் டிரைவர் சைடு ஏர்பேக், ஏ.பி.எஸ், இ.பி.டி. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைன்டர், ஸ்பீடு அலெர்ட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News