ஆட்டோமொபைல்
ஃபோர்டு மிட்நைட் சர்ப்ரைஸ் விற்பனை

ஃபோர்டு மிட்நைட் சர்ப்ரைஸ் விற்பனை - ரூ.5 கோடி வரை பரிசுகள் அறிவிப்பு

Published On 2019-12-07 09:25 GMT   |   Update On 2019-12-07 09:25 GMT
ஃபோர்டு நிறுவனத்தி்ன் மிட்நைட் சர்ப்ரைஸ் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5 கோடி வரையிலான பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.



ஃபோர்டு கார் நிறுவனம் சார்பில் மிட்நைட் சர்ப்ரைஸ் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விற்பனையின் அங்கமாக கார்களை முன்பதிவு செய்வோருக்கு ரூ.5 கோடி வரை பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை நவம்பர் 8-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. மிட்நைட் சர்ப்ரைஸ் திட்டத்தின் படி ரூ.5 கோடி மதிப்புள்ள மேம்பட்ட வசதி, தவிர்க்கமுடியாத ஒப்பந்தங்கள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட பரிசுகளை வாடிக்கையாளர்கள் பெறலாம். 

இந்த சலுகை அறிவிப்பையொட்டி ஃபோர்டு கார் விற்பனை மையங்கள் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை திறந்திருக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் கார்களை இயக்கி பார்த்தல், முன்பதிவு செய்தல் உள்ளிட்டவற்றுக்கு மிகவும் வசதியாக இருக்கும். 



சலுகை அறிவிக்கப்பட்ட நாட்களில் ஃபோர்டு காரை முன்பதிவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பரிசு வவுச்சர் கிடைக்கும். இந்த மாதத்துக்குள் கார்களை டெலிவரி செய்யும்போது உறுதியான பரிசுகளையும் அவர்கள் பெறுவார்கள். மிட்நைட் சர்ப்ரைஸ் சலுகை திட்டத்தின்போது செய்யப்பட்ட கார் முன்பதிவுகளுக்கான பரிசுகளில் பிரீமியம் வீட்டு உபகரணங்கள், இசை அமைப்பு, சர்வதேச அல்லது உள்நாட்டு விடுமுறை வவுச்சர்கள் மற்றும் தங்க நாணயம் ஆகியவை அடங்கும். 

ஃபோர்டு பிகோ, ஃபோர்டு ஆஸ்பையர், ஃபோர்டு ஃபிரீஸ்டைல், ஃபோர்டு இகோஸ்போர்ட் மற்றும் ஃபோர்டு எண்டேவர் ஆகியவற்றை உள்ளடக்கிய போர்டின் அனைத்து தயாரிப்புகளுக்கும் பொருந்தும்.
Tags:    

Similar News