ஆட்டோமொபைல்
ஹூண்டாய் ஆரா

புதிய ஆரா காரின் சோதனையை துவங்கிய ஹூண்டாய்

Published On 2019-11-15 08:56 GMT   |   Update On 2019-11-15 08:56 GMT
ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய ஆரா சப்-காம்பேக்ட் செடான் காரின் சோதனையை அதிகாரப்பூர்வமாக துவங்கியிருக்கிறது.



ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஆரா சப்-காம்பேக்ட் செடான் காரின் சோதனையை அதிகாரப்பூர்வமாக துவங்கி இருக்கிறது. புதிய ஆரா மாடல் அடுத்த தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஆரா காரின் சோதனை ஹூண்டாய் நிறுவனத்தின் சென்னை ஆலையில் இருந்து துவங்கப்பட்டுள்ளது. புதிய கார் பாலைவனங்கள், இமய மலை பகுதிகள் மற்றும் கிழக்கு கடலோர பகுதிகள் என இந்திய வானிலை மற்றும் சாலைகளில் தீவிர சோதனை செய்யப்படும் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது.



ஏற்கனவே ஹூண்டாய் ஆரா காரின் ப்ரோடோடைப் மாடல்கள் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. எனினும், தற்சமயம் இந்த கார் இந்தியா முழுக்க சோதனை செய்யப்பட இருக்கிறது. புதிய ஹூண்டாய் ஆரா கார் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் காட்சிப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் உள்புறங்களில் கிராண்ட் ஐ10 நியோஸ் போன்ற வடிவமைப்பும், 8.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டூயல் டோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் புளூ-லின்க் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய ஆரா காரின் பின்புற பம்ப்பரில் பதிவு எண் பலகை, எல்.இ.டி. ஸ்ட்ரிப்கள், ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இதில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

புகைப்படம் நன்றி: TeamBHP
Tags:    

Similar News