ஆட்டோமொபைல்
டொயோட்டா கார் - ஹூண்டாய் கார்

பொருளாதார மந்த நிலை: டொயோட்டா, ஹூண்டாய் நிறுவனங்களின் கார் உற்பத்தி நிறுத்தம்

Published On 2019-09-04 05:05 GMT   |   Update On 2019-09-04 05:05 GMT
பொருளாதார மந்த நிலையின் காரணமாக டொயோட்டா, ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் கார் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.
ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டோ, தென்கொரியாவின் ஹூண்டாய் ஆகியவை சில தொழிற்சாலைகளில் உற்பத்தியை தற்காலிமாக நிறுத்தியுள்ளன. அங்கு பணியாற்றுபவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.



பொருளாதார மந்தநிலை நீடிக்கும் நிலையில் டொயோட்டோ, ஹூண்டாய் போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் சில தொழிற்சாலைகளில் தங்களது உற்பத்தியை நிறுத்திக் கொண்டுள்ளன. அங்கு பணியாற்றுபவர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆட்டோ மொபைல் துறை சரிவை சந்தித்து வருகின்றது. ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் விற்பனைக்கு செல்லாமல் இருப்பதால், அவை தொழிற்சாலைகளில் தேங்கி நிற்கின்றன. இதனால் புதிய கார்கள் தயாரிப்பதை நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தத் தொடங்கியுள்ளன.

இந்திய ஆட்டோ மொபைல் துறையை பொருத்தவரை தற்போதுவரை 3.5 லட்சம்பேர் பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயணிகள் வாகனங்களின் விற்பனை சரிவை சந்தித்திருக்கிறது.

இதனால், ஆட்டோ மொபைல் துறையில் பணியாற்றுபவர்கள் வேலை இழந்து வருகின்றனர். இந்த நிலை இன்னும் சில காலம் நீடிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் பிரபல ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டோ, தென்கொரிய நிறுவனம் ஹூண்டாய் ஆகியவை சில தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்திக் கொண்டுள்ளன.

டொயோட்டோ தனது பெங்களூரு தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்திக் கொண்டுள்ளது. கார்களுக்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தாலும், விற்பனையாகாமல் 7 ஆயிரம் கார்கள் தேங்கி நிற்பதாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டொயோட்டோ தெரிவித்துள்ளது.

பண்டிகை நாட்களில் கார்களின் விற்பனை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன.

Tags:    

Similar News