ஆட்டோமொபைல்
ஹுண்டாய் கார்

பாதுகாப்பு கெடுபிடி: கார்கள் விலையை ஏற்றும் ஹுண்டாய்

Published On 2019-09-01 06:35 GMT   |   Update On 2019-09-01 06:35 GMT
ஹுண்டாய் மோட்டாரின் இந்தியா நிறுவனம் தங்களது கார்களின் விலையை ரூ.9,200 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையானது மிக பெரிய மாற்றத்தை காண உள்ளது. பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்படவுள்ளது. இதையடுத்து பல கார் நிறுவனங்கள் அதற்கு ஏற்ப தங்களது கார்களை மாற்றுகின்றன.

இந்த மாற்றங்களுக்கு ஏற்ப கார்களை அமைப்பதால் கார் நிறுவனங்கள் அதிக செலவு செய்து வருகிறது. இதனை ஈடுசெய்ய கார்களின் விலைகளை ஏற்ற கார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தங்களது கார்களின் விலையை 9,200 ரூபாய் வரை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



இந்த விலை ஏற்றம் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல்  அறிமுகம் செய்யப்பட்ட கார்களுக்கு BNVSAP நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. அக்டோபர் 2019 முதல் அனைத்து மாடல்களுக்கும் இது கட்டாயமாக்கப்படுகிறது. இரண்டு ஏர் பேக், ஸ்பிட் அலர்ட் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைண்டர், பின்பக்க பார்க்கிங் சென்சர் முதலியானவை கட்டாயமாக்கப்படுகிறது.

ஹூண்டாய் வென்யூ மற்றும் சாண்ட்ரோ கார்கள் கே1 பிளாட்பார்மில் தயாராகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் சாண்ட்ரோ ஹாட்ஸ்பேக் காரானது புது கே1 பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டது. இது முந்தைய பிஏ பிளாட்பார்மை விட 63 சதவிகிதம் பலமானதாகும். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கோனா எலக்ட்ரிக் மற்றும் வென்யூ கார்களுக்கு இந்த விலை ஏற்றம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News