ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி

வாகனங்களுக்கு ஐந்து ஆண்டுகள், ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டி அறிவித்த மாருதி சுசுகி

Published On 2019-08-20 11:28 GMT   |   Update On 2019-08-20 11:28 GMT
மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்களில் சில மாடல்ளுக்கு ஐந்து ஆண்டுகள், ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டி வழங்குவதாக அறிவித்துள்ளது.



மாருதி சுசுகி நிறுவனம் நான்கு டீசல் மாடல்களுக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டி வழங்குவதாக அறிவித்துள்ளது.

மாருதி டிசையர், எஸ்-கிராஸ், ஸ்விஃப்ட் மற்றும் விடாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு புதிய வாரண்டி சலுகை பொருந்தும். இச்சலுகை மாருதியின் நெக்சா மற்றும் அரீனா விற்பனையகங்களில் இந்த வாகனங்களை முன்பதிவு செய்வோருக்கு எவ்வித கூடுதல் கட்டணம் இன்றி வழங்கப்படுகிறது. 

இந்தியா முழுக்க 1893 பகுதிகளில் நெக்சா மற்றும் அரீனா விற்பனையகங்கள் இயங்கி வருகின்றன. வாரண்டியில் வாகனங்களின் பல்வேறு பாகங்களை சரி செய்வது மற்றும் அவற்றை மாற்றிக் கொடுக்கப்படுகிறது. இதில் ஹை-பிரெஷர் பம்ப், கம்ப்ரெஸர், எலெக்டிராணிக் கண்ட்ரோல் மாட்யூல், டர்போசார்ஜர் அசெம்ப்ளி, க்ரிடிக்கல் என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் பாகங்கள் அடங்கும். 



இதுதவிர ஸ்டீரிங் அசெம்ப்ளி மற்றும் சஸ்பென்ஷன் ஸ்ட்ரட்களும் வாரண்டியில் சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சலுகை புதிதாக கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே வாகனங்களை வாங்கியவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது.

இத்திட்டத்தில் பொருந்தும் அனைத்து வாகனங்களிலும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. முன்னதாக சிறிய டீசல் என்ஜின்கள் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படாது என மாருதி சுசுகி அறிவித்துவிட்டது. இதனால் இவை விரைவில் நிறுத்தப்படலாம் என தெரிகிறது.
Tags:    

Similar News