பைக்

இந்தியாவில் இரு மோட்டார்சைக்கிள்களை ரிகால் செய்யும் பிஎம்டபிள்யூ

Published On 2023-01-28 11:52 GMT   |   Update On 2023-01-28 11:52 GMT
  • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் இரு மோட்டார்சைக்கிள்களை ரிகால் செய்வதாக அறிவித்துள்ளது.
  • பாதிக்கப்பட்ட வாகனங்களை வைத்திருப்போருக்கு பிஎம்டபிள்யூ ரிகால் பற்றி தகவல் அனுப்பி வருகிறது.

பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் மற்றும் R 1250 RT மாடல்களின் தேர்வு செய்யப்பட்ட யூனிட்களை ரிகால் செய்கிறது. ரிகால் நடவடிக்கை வட அமெரிக்க சந்தையில் மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கியர்பாக்ஸ் இன்புட் ஷாஃப்ட் உடையும் அபாயம் ஏற்பட்டு இருப்பதால், மோட்டார்சைக்கிள்கள் ரிகால் செய்யப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட யூனிட்களில் உள்ள கியர்பாக்ஸ் இன்புட் ஷாஃப்ட் ஓவர்லோட் ஆகி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பின்பற சக்கரத்தை நிறுத்தி விடும். இதன் காரணமாக விபத்து மற்றும் காயம் ஏற்படும் அபாயம் அதிகம் ஆகும். இம்முறை 18 ஆயிரத்து 489 யூனிட்கள் ரிகால் செய்யப்படுகின்றன.

பிஎம்டபிள்யூ R 1250 GS 6 ஆயித்து 812 யூனிட்கள்

பிஎம்டபிள்யூ R 1250 GS அட்வென்ச்சர் 9 ஆயிரத்து 401 யூனிட்கள்

பிஎம்டபிள்யூ R 1250 RT 2 ஆயிரத்து 276 யூனிட்கள்

குறிப்பு: பாதிக்கப்பட்ட யூனிட்கள் 2019 முதல் 2023-க்குள் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்.

பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் பாதிக்கப்பட்ட யூனிட்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அவற்றை பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி வருகிறது. மேலும் ரிகால் சர்வீஸ் செய்ய அருகாமையில் உள்ள பிஎம்டபிள்யூ விற்பனையாளரை தொடர்பு கொள்ளும் பிஎம்டபிள்யூ கேட்டுக் கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட யூனிட்களில் பிஎம்டபிள்யூ விற்பனையாளர்கள் என்ஜின் கண்ட்ரோல் யூனிட் மென்பொருளை அப்டேட் செய்து வழங்க இருக்கிறது. இதுதவிர பிஎம்டபிள்யூ நிறுவனம் 2019 முதல் 2023 வரை உற்பத்தி செய்யப்பட்ட R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் மற்றும் R 1250 RTP மாடல்களின் விற்பனையை நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News