பைக்
பைக்குகள்

பைக், ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்தும் பிரபல நிறுவனம்

Published On 2022-04-01 10:54 GMT   |   Update On 2022-04-01 10:54 GMT
ஏற்கனவே பி.எம்.டபில்யூ, பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வாகனங்களின் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளன.
இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தனது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ரூ.2,000 வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.  இந்த விலை உயர்வு ஏப்ரல் 5 முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளது.

மோட்டார் உதிரி பாகங்கள் மற்றும் வாகனப் பிரிவின் பல அம்சங்களின் ஏற்பட்டுள்ள விலை உயர்வால் இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விலை உயர்வு  மாடல் மற்றும் சந்தையைப் பொறுத்து மாறுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 டோயோடோ கிர்லோஸ்கர் மோடர், ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சடிஸ்-பென்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஏற்கனவே ஏப்ரல் 2022 முதல் வாகனங்களின் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்த நிலையில், ஹீரோ நிறுவனமும் விலையை உயர்த்தப்போகிறது.
Tags:    

Similar News