பைக்
எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க டி.வி.எஸ். மற்றும் பி.எம்.டபிள்யூ. கூட்டணி
பி.எம்.டபிள்யூ. மற்றும் டி.வி.எஸ். மோட்டராட் நிறுவனங்கள் இணைந்து புதிதாக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன.
இந்திய இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் ஜெர்மன் நாட்டை சேர்ந்த பி.எம்.டபிள்யூ. மோட்டராட் உடன் இணைந்து எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருக்கிறது.
முன்னதாக 2013 ஆம் ஆண்டு இருநிறுவனங்கள் கூட்டணி அமைத்து டி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர்.310, பி.எம்.டபிள்யூ. ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜி.எஸ். மாடல்களை அறிமுகம் செய்தன. இந்த கூட்டணி காரணமாக இந்தியாவில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை வளர்ச்சி பெற துவங்கியது.
மேலும் இந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 5 ஆயிரம் மோட்டார்சைக்கிள் யூனிட்களை வினியோகம் செய்து பி.எம்.டபிள்யூ. மோட்டராட் புதிய மைல்கல் எட்டியது. இதில் 90 சதவீத யூனிட்கள் ஜி சீரிஸ் மாடல்கள் ஆகும். இரு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் முதல் மாடல் அடுத்த 24 மாதங்களுக்குள் அறிமுகமாகிறது.