ஆட்டோமொபைல்
ஹீரோ மோட்டார்சைக்கிள்

அனைத்து மாடல்கள் விலையை மாற்றும் ஹீரோ மோட்டோகார்ப்

Published On 2021-09-17 06:08 GMT   |   Update On 2021-09-17 06:08 GMT
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் தனது இருசக்கர வாகனங்கள் விலையை மீண்டும் மாற்றுகிறது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு செப்டம்பர் 20 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இம்முறை மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் விலை ரூ. 3 ஆயிரம் வரை உயர்கிறது.

ஆகஸ்ட் மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் வாகனங்கள் விற்பனை 22 சதவீதம் சரிவடைந்தது. முன்னதாக பல்வேறு முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் தங்களது வாகனங்களின் விலையை அதிகரித்து வருகின்றன. உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பதை நிறுவனங்கள் விலை உயர்வுக்கு காரணமாக தெரிவிக்கின்றன.



தற்போது வாகனங்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், பண்டிகை காலக்கட்டத்தில் இதே நிலை மேலும் அதிகரிக்கும். எனினும், முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட தட்டுப்பாடு இந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் இருக்காது என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News