ஆட்டோமொபைல்
ஜாவா மோட்டார்சைக்கிள்

விநியோக பணிகளை தீவிரப்படுத்தும் ஜாவா

Published On 2021-06-01 05:49 GMT   |   Update On 2021-06-01 05:49 GMT
ஜாவா நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் தாய் நிறுவனமான கிளாசிக் லெஜண்ட்ஸ் இந்தியாவில் தனது பணிகளை முடுக்கிவிட திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் மாநிலங்களில் இவற்றை துரிதப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கடுமையான நெருக்கடி காலக்கட்டத்திலும் கிளாசிக் லெஜண்ட்ஸ் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வந்தது. சிறப்பான பணியாட்கள் மூலம்தான் இது சாத்தியமானது. ஏற்கனவே வாகனத்தை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவரியை சரியாக மேற்கொள்ள இது அடித்தளமாக அமைந்துள்ளது என கிளாசிக் லெஜண்ட்ஸ் தெரிவித்துள்ளது.

ஊரடங்கில் தளர்வுகள் பெறும் மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஜாவா மோட்டார்சைக்கிள் விநியோகம் துரிதப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பிப்ரவரி 2021 வாக்கில் ஜாவா பார்டி டு ஸ்போர்ட்ஸ் ஸ்டிரைப் மாடல் புது கிராபிக்ஸ், சிறு காஸ்மெடிக் மாற்றங்கள், அலாய் வீல், டியூப்லெஸ் டையர்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. 



வாகனங்களில் மாற்றம் செய்ததால், வாகன விற்பனை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. பார்டி டூ மாடலுக்கான முன்பதிவு மற்றும் காத்திருப்பு காலம் அதிகரித்து இருக்கிறது. விரைவில் இந்த மாடலுக்கான விநியோகம் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது நாடு முழுக்க சுமார் 175 ஜாவா விற்பனை மையங்கள் சுமார் 150-க்கும் அதிக நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கை 275 ஆகவும், அடுத்த 12 மாதங்களில் இது 500 ஆகவும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News