ஆட்டோமொபைல்
ஏப்ரல் மாதத்தில் 53 ஆயிரம் யூனிட்களை விற்ற ராயல் என்பீல்டு
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 ஏப்ரல் மாத வாகனங்கள் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ராயல் என்பீல்டு நிறுவனம் 2021 ஏப்ரல் மாதத்தில் இந்திய சந்தையில் 53,298 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 19 சதவீதம் குறைவு ஆகும். 53,298 யூனிட்களில் 48,789 யூனிட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 4509 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
ஏப்ரல் 2020 காலக்கட்டத்தில் இந்தியாவில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதன் காரணமாக வாகனங்கள் விற்பனை முற்றிலும் தடைப்பட்டது. பின் வாகன விற்பனை இயல்பு நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆகின. இந்த ஆண்டு துவக்கம் முதலே வாகனங்கள் விற்பனையில் கணிசமான வளர்ச்சியை நிறுவனங்கள் பதிவு செய்தன.
தற்போது சில தளர்வுகளுடன் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருவதால், வாகன விற்பனை சரிவடைய துவங்கி இருக்கிறது. இதே காரணத்தால் ராயல் என்பீல்டு வாகனங்கள் விற்பனையும் குறைந்து இருக்கிறது.