ஆட்டோமொபைல்
ஹீரோ எலெக்ட்ரிக்

ஹீரோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரம்

Published On 2020-04-20 07:20 GMT   |   Update On 2020-04-20 07:20 GMT
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெளியீட்டை ஒத்திவைத்து இருக்கிறது. ஹீரோ எலெக்கட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் ஏஇ-47 எனும் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் வெளியிட திட்டமிட்டிருந்தது. 

எனினும், இதன் வெளியீடு திட்டமிட்டப்படி நடைபெறாது என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவன நிர்வாக இயக்குனர் நவீன் முஞ்சல் தெரிவித்திருக்கிறார்.

ஹீரோ எலெக்ட்ரிக் ஏஇ-47 மோட்டார்சைக்கிள் முன்னதாக நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிகழ்வின் போது இந்த மோட்டார்சைக்கிள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் வெளியி அதிக வாய்ப்புகள் இருப்பதாக நவீன் முஞ்சல் தெரிவித்திருந்தார்.



தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இதன் வெளியீட்டை அடுத்த ஆண்டு வரையாவது ஒத்திவைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். இப்போதைய காலக்கட்டத்தில் மோட்டார்சைக்கிளை வெளியிட்டு விற்பனை செய்வது சரியான முடிவாக இருக்காது என ஹீரோ எலெக்ட்ரிக் கருதுவதாக கூறப்படுகிறது.  

இந்தியாவில் புதிய ஹீரோ எலெக்ட்ரிக் ஏஇ-47 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 2 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News