ஆட்டோமொபைல்
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கேடிஎம் வாரண்டி மற்றும் சர்வீஸ் நீட்டிப்பு
கேடிஎம் நிறுவனம் தனது இலவச சேவைகள் மற்றும் வாரண்டி சலுகைகளை நாடு முழுக்க நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
கேடிஎம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி மற்றும் இலவச சேவைகளை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் வாரண்டி மற்றும் இலவச சேவைகளுக்கான வேலிடிட்டி ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், வாரண்டி மற்றும் இலவச சேவைகளுக்கான வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக பல்வேறு நிறுவனங்கள் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சர்வீஸ் செய்ய அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்று கேடிஎம் எதிர்பார்க்கிறது. இதன் காரணமாகவே வாரண்டி மற்றும் சர்வீஸ் செய்வதற்கான காலக்கெடுவை ஜூன் மாத இறுதி வரை நீட்டித்து இருக்கிறது.
வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட சேவைகள் மீதான வேலிடிட்டி நீட்டிப்பு மார்ச், ஏப்ரல் அல்லது மே மாத வாக்கில் நிறைவு பெறும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும். மேலும் இந்த காலக்கட்டத்தில் சர்வீஸ் மையங்களுக்கு தேவையான பாகங்களை ஸ்டாக் வைத்துக் கொள்ள போதுமானதாக இருக்கும்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உற்பத்தி ஆலையின் பணிகளை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் மூலம் ஆலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முடியும்.