ஆட்டோமொபைல்
ஹீரோ குழுமம்

கொரோனா வைரஸ் - தேசிய நிவாரண நிதிக்கு ரூ. 100 கோடி வழங்குவதாக ஹீரோ குழுமம் அறிவிப்பு

Published On 2020-04-01 09:59 GMT   |   Update On 2020-04-01 09:59 GMT
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள பிரதமர் நிவாரண நிதிக்கு ஹீரோ குழுமம் சார்பில் ரூ. 100 கோடி நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.



கொரோனா வைரஸ் நோய் தொற்று ஒட்டுமொத்த உலகையும் வெகுவாக பாதித்து இருக்கிறது. பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன. அந்த வரிசையில் ஹீரோ குழுமம் ரூ. 100 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதில் ரூ. 50 கோடி பிரதமர் நிவாரண நிதிக்கும் மீதமுள்ள ரூ. 50 கோடி மற்ற மீட்பு பணிகளுக்கு செலவிடப்பட இருப்பதாக ஹீரோ குழுமம் அறிவித்துள்ளது. ஹரியானாவில் உள்ள முஞ்சல் பல்கலைக்கழகம் சார்பில் சுமார் 2000 படுக்கைகள் உள்ளூர் ஆரோக்கியம் மற்றும் சுகாதார துறைக்கு வழங்கப்படுகிறது.

இதுதவிர அப்பகுதியில் உள்ள சுமார் 150 கிராமங்களுக்கு உணவு மற்றும் ஆரோக்கியத்தை காக்கும் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 



உலகின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் சார்பில் இலவச முகக்கவசங்கள், சானிடைஸர்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் மருத்துவமனை மற்றும் ஆரோக்கிய துறைகளுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

மேலும் ஹீரோ மோட்டோகார்ப் சார்பில் 60 மோட்டார்சைக்கிள்கள் கிராமங்களில் உள்ள ஆரோக்கிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது. இவற்றை மொபைல் ஆம்புலன்ஸ் போன்று பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. 

இதுதவிர டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, உத்தர்கண்ட், ஆந்திர பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட பல்வேறு பகுதிளில் தினசரி ஊழியர்களுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான உணவு பொட்டலங்களை ஹீரோ மோட்டோகார்ப் விநியோகம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News