ஆட்டோமொபைல்
அப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர். 160 மேக்ஸ்

160 சிசி திறன் கொண்ட அப்ரிலியா ஸ்கூட்டர் அறிமுகம்

Published On 2020-02-06 09:33 GMT   |   Update On 2020-02-06 09:33 GMT
பியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர். 160 மேக்ஸ் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



பியாஜியோ நிறுவனம் இந்தியாவில் அப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர். 160 ஸ்கூட்டரை ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் விற்பனை 2020 ஆண்டின் மூன்றாவது காலாண்டில் துவங்கும் என தெரிகிறது.

புதிய எஸ்.எக்ஸ்.ஆர். மோட்டோ ஸ்கூட்டரின் வடிவமைப்பு பணிகளை இத்தாலியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக மேற்கொண்டதாக தெரிவித்து இருக்கிறது. அப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர். 160 ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஆகஸ்ட் மாதத்தில் துவங்குகிறது.



புதிய ஸ்கூட்டரில் 160சிசி மூன்று வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 10.8 பி.ஹெச்.பி. பவர் மற்றும் சி.வி.டி. கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதே ஸ்கூட்டரின் 125சிசி வேரியண்ட்டை அறிமுகம் செய்ய அப்ரிலியா திட்டமிட்டுள்ளது. எஸ்.ஆர். 125 என்ஜின் 9.4 பி.ஹெச்.பி. பவர், 9.9 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் சி.வி.டி. கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News