ஆட்டோ டிப்ஸ்

பாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க் எண்ணிக்கையை வேகமாக அதிகப்படுத்தும் ஏத்தர் எனர்ஜி

Published On 2022-10-15 10:58 GMT   |   Update On 2022-10-15 10:58 GMT
  • ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க் விரிவாக்கம் பற்றி புது தகவல் தெரிவித்துள்ளது.
  • எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க் விளங்குகிறது.

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை கடந்த சில மாதங்களாக கணிசமாக அதிகரித்து வருகிறது. எனினும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்னமும் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களும் சார்ஜிங் நெட்வொர்க்-ஐ முடிந்த வரை அதிகப்படுத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்த வரிசையில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் இன்ஸ்டால் செய்து இருக்கும் சார்ஜிங் நெட்வொர்க் எண்ணிக்கையில் புது மைல்கல் எட்டியுள்ளது. பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஏத்தர் எனர்ஜி 580-வது ஏத்தர் க்ரிட் பாஸ்ட் சார்ஜிங் மையத்தை வெற்றிகரமாக இன்ஸ்டால் செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

நாடு முழுக்க 56 நகரங்களில் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் பாஸ்ட் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 60 சதவீத பாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்குகள் இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் உள்ளன. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் மேலும் 820 பாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்குகளை அமைக்க ஏத்தர் எனர்ஜி திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த சார்ஜிங் நெட்வொர்க் எண்ணிக்கை 1400 ஆக அதிகரிக்கும்.

ஏத்தர் நிறுவன சார்ஜிங் மையங்களில் அனைத்து எலெக்ட்ரிக் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாம். சார்ஜ் செய்வதற்கான கட்டணம் டிசம்பர் 2022 வரை இலவசம் ஆகும். சமீபத்தில் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விடா வி1 மாடலை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்தது. இந்த மாடலுக்கு ஏத்தர் சார்ஜிங் மையங்களில் சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News