ஆட்டோ டிப்ஸ்
ஓலா S1 ப்ரோ

அடிக்கடி தொல்லை கொடுக்குது - ஓலா ஸ்கூட்டரை தீ வைத்து எரித்த நபரால் பரபரப்பு!

Published On 2022-04-27 10:58 GMT   |   Update On 2022-04-27 10:58 GMT
ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததை அடுத்து, ஸ்கூட்டருக்கு தீ வைத்து எரித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழகத்தில் ஓலா எலெக்ட்ரிக் S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்படுத்தி வந்த நபர் அதனை தீ வைத்து எரித்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. தனது ஓலா இ ஸ்கூட்டர் அடிக்கடி பிரச்சினை ஏற்படுத்தி வந்ததை அடுத்து இவ்வாறு செய்ததாக அந்த நபர் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக ஸ்கூட்டர் தானாக தீப்பிடித்து எரிவது மிகப் பெரும் பிரச்சினையாக இருந்து வரும் நிலையில், வாடிக்கையாளரே ஸ்கூட்டருக்கு தீ வைத்த சம்பவம் இதுவே முதல் முறையாக பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர் ஆத்திரத்தில் தனது ஸ்கூட்டர் மீது பெட்ரோலை ஊற்றி, அதற்கு தீ வைத்து எரிக்கும் பரபர காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஓலா ஸ்கூட்டரை பயன்படுத்தி வந்த டாக்டர் பிரித்விராஜ் அதன் செயல்திறன் மற்றும் ரேன்ஜ் எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமாக இருந்துள்ளதை கண்டு மன வேதனையில் ஆழ்ந்துள்ளார். 

மூன்று மாதங்களுக்கு முன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவரிக்கு எடுத்த நிலையில், பல்வேறு சமயங்களில் இந்த ஸ்கூட்டர் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. எனினும், ஓலா சப்போர்ட் ஸ்கூட்டரை ஆய்வு செய்து, அதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றே பதில் அளித்து வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

இந்த நிலையில், தான் ஸ்கூட்டரை முழு சார்ஜ் செய்த பிரித்விராஜ் அதில் வெறும் 44 கிலோமீட்டர் ஓடியதை அடுத்து ஸ்கூட்டரில் சார்ஜ் இன்றி ஆஃப் ஆகி விட்டது. முன்னதாக மற்றொரு வாடிக்கையாளர் ஒருவர் தனது ஸ்கூட்டரை கழுதையை கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியது. 

Tags:    

Similar News