ஆட்டோ டிப்ஸ்
ஸ்கோடா கார்

புத்தாண்டு முதல் புதிய விலை - ஸ்கோடா அதிரடி

Published On 2021-12-19 09:45 IST   |   Update On 2021-12-18 16:38:00 IST
ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்த இருக்கிறது.


ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு ஜனவரி 1, 2022 அன்று அமலுக்கு வருகிறது. கார் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வு அமையும். 

முன்னதாக ஸ்கோடா குஷக் ஆக்டிவ் 1.0 டி.எஸ்.ஐ. எம்.டி. வேரியண்ட் விலை ரூ. 29 ஆயிரம் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் புதிய தலைமுறை ஆக்டேவியா மற்றும் முற்றிலும் புதிய குஷக் மாடல்களை அறிமுகம் செய்தது. 



அடுத்த ஆண்டு மேலும் இரண்டு புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக கோடியக் பேஸ்லிப்ட் மாடல் அறிமுகமாகிறது. இந்த மாடல் காஸ்மெடிக் மாற்றங்கள், புதிய பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Similar News